Thursday, January 9, 2020

ரஞ்சன் விடயத்தில் ஜனாதிபதியின் பங்களிப்பு....!

தற்போது சமூக ஊடகங்களில் வெளிவரும் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு குறித்து சிறப்பு விசாரணை ஆணைக்குழு ஒன்றினை நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சட்ட ஆலோசனை பெற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்து சிறப்பு விசாரணைக் குழுவை நியமிக்கக் கோரியுள்ளது, அதற்கு பதிலளிக்கும் விதமாகவே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இது தொடர்பில் குறிப்பிட்டார்.

இருப்பினும், அமைச்சர்கள் சிலர் ஏற்கனவே இலஞ்சம் மற்றும் குற்றப் புலனாய்வுத் ஆணைக்குழுவில் புகார் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com