Wednesday, January 1, 2020

சஜித்திற்கெதிராக விசாரணை! ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய கடன்!

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சராக இருந்த காலத்தில் கம்உதாவ தொடர்பில் விளம்பரங்கைள ஒலி-ஒளிபரப்புச் செய்வதற்காக ஸ்ரீலங்கா ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

அவ்விடயம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குத் தெளிவுறுத்தியுள்ளார்.

நேற்று அக்கூட்டுத்தாபன ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில், கம்உதாவ வேலைத்திட்டம் தொடர்பிலான விளம்பரங்களுக்கு ரூபா 103 மில்லியன் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாக அக்கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com