Wednesday, January 1, 2020

புதுவருடத்தின் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

புதுவருட தினமான இன்று அதிகாலை 4.00மணியளவில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிய பாரஊர்தி கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை விநியோகித்து விட்டு திரும்பி வருகின்ற வேளை எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பாரஊர்தியுடன் மோதியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச்சேர்ந்த 23வயதுடைய வரதராஜா ஜெமினன் மற்றும் யாழ்ப்பாணம் செட்டியார் மடம் அராலி மேற்கைச்சேர்ந்த 29வயதுடைய செல்வநாயகம் அஜிந்தன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வீதியில் பட்டாசுகளை கொளுத்தி எறிந்தவாறு அதிக வேகத்தில் பயணித்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது எனதெரிவிக்கப்படுகிறது.
பாரஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com