Wednesday, January 1, 2020

ரஞ்சித் சொய்சாவின் மனைவி தேர்தலில் கால் பதிக்கிறார்....!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தான் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடவுள்ளதாக மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் மனைவி முதிதா டி சொய்சா தெரிவித்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆசீர்வாதத்துடன் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறிய அவர், இரத்தினபுரி மக்களின் வேண்டுகோளுக்கு தலைசாய்ப்பதாவும் அவர் கூறினார்.

கொடகவிலயில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் அவருடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும், அதற்கேற்ப தான் அரசியலில் களம் இறங்கவுள்ளதாகவும், மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பு தனக்குப் பலமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com