யாழ். சிறைச்சாலை முன் சுவரில் பெளத்த சித்திரங்கள் வரைவதற்கு கடும் எதிர்ப்பு!
யாழ்ப்பாணம், சிறைச்சாலை முன் சுவரில், பெளத்த வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் சித்திரங்கள் வரைவதற்கும் பெளத்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் வரலாற்றைப் பிரதிபலிக்கும் சிலைகள் மூன்றினை நிர்மாணிப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, அரசியல் கட்சியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருசிலர் நேற்று முன்தினம் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் வடக்கு மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பெளத்த மத நிகழ்வுகளை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைவதையும், சிலைகள் நிறுவுவதையும் தாம் எதிர்ப்பதாக தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து, சிறை அதிகாரிகள் தற்காலிகமாக சித்திரம் தீட்டுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
0 comments :
Post a Comment