19 ஆவது இலக்கச் சட்டத்தை நீக்குவதனால் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிட்டவே கிட்டாது - ரவி
19 வது திருத்தத்தை நீக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நேற்று மாலை மட்டக்குளி - விஸ்ட்விக் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“19 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித நலனும் ஏற்படாது. வரிகளை குறைத்தல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், உரங்களுக்கு மானியம் வழங்குதல், வீட்டுவசதி வழங்குதல் போன்ற மக்களின் நலனுக்காக எடுக்கப்படுகின்ற எந்தவொரு நலனுக்காகவும் நாங்கள் 2/3 ஐ ஆதரவினை நாங்கள் வழங்குவோம்.
எம்.சி.சி ஒப்பந்தம் நாட்டிற்கு தீங்கு விளைவிக்காது என்று நாங்கள் அன்றும் கூறினோம். இன்று அவர்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அன்று எந்தவித ஒப்பந்தங்களும் இல்லாமல் நாட்டுக்கு கிடைக்கவிருந்தவற்றைப் பெற்றுக்கொள்ள அவர்கள் இடம்தரவில்லை. இன்று பெற்றுக்கொள்ளச் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரேயடியாக காலை இரவாகின்றது.... இரவு காலையாகின்றது.''எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment