Monday, December 23, 2019

ஐ.தே.க எதிர்வரும் தேர்தலில் 113 ஆசனங்களை பெறத்தவறின் நாம் அவர்களுடன் இணைந்து கூட்டாட்சி அமைப்போம். சுமந்திரன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 113 இடங்களை எட்டத் தவறினால், மீண்டும் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தின் குறிப்பிட்டார்.

அவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணிக்கு அக்கட்சியை ஆதரிப்பதற்குக் காரணம், புதிய 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் வடக்கு மாகாணப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனால்எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com