Sunday, December 22, 2019

ஈஸ்டர் தாக்குதல் குறித்து எச்சரிக்கை கடிதம் ஏப்ரல் 11 SP அலுவலகத்திற்கு கிடைத்தது! போட்டுடைக்கின்றார் பரிசோதகர்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பாக பூரண எச்சரிக்கை கடிதமொன்று 2019 ஏப்ரல் 11ம் திகதி வட கொழும்பிற்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சிவ பண்டாரவின் காரியாலயத்திற்கு கிடைத்ததாகவும் அவரின் பிரத்தியேக உதவியாளர் பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.உபேந்திர தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (21) சாட்சியமளித்துள்ளார்.

ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பொலிஸ் பரிசோதகர் குறித்த எச்சரிக்கை கடிதம் தொடர்பாக தனக்கு தெரியும் எனவும் சஹ்ரான் ஹாசீம் மற்றும் அவரது ஆதரவாளர்களினால் தற்கொலை குண்டு தாக்குதல் நடைபெறும் எனவும், அவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய இடங்களாக இந்திய உயர் ஸ்தானியகம் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் குறித்து அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்தைப் பெற்றபின் சஞ்சீவ பண்டாராவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும், கொழும்பு வடக்கு பிரிவில் உள்ள அனைத்து OIC க்கள் மற்றும் ASP களுக்கு அது குறித்து குறிப்புக்களை எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.



இதற்கமைய குறித்த ஆவணங்கள் பொலிஸ் நிலையங்களுக்கு தொலைநகல் மூலம் அனுப்புமாறு அன்றைய தினம் சேவையாற்றிய தொலைபேசி கட்டுப்பாட்டாளருக்கு வழங்கிய போதும் அடுத்த நாள் காலை 6.00 மணிக்கு சோதனை செய்தபோது குறித்த ஆவணங்கள் அனுப்பப்படவில்லை என அறிந்துக்கொள்ள முடிந்ததாகவும் அது தொடர்பாக விசாரித்த பொது கடலோர பொலிஸ் நிலையத்திற்கு தொலைநகல் மூலம் ஆவணங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், அவை தெளிவாக இல்லை என அவர்கள் தெரிவித்ததனால் மற்ற பொலிஸ் நிலையங்களுக்கு தொலைநகல் அனுப்பப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பின்னர் வட கொழும்புக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அதிகாரி சஞ்சிவ பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் கத்தோலிக்க தேவலையங்கள் அமைந்துள்ள கொட்டஹேன, மோதரை, கரையோர மற்றும் ஜம்பட்டா வீதி ஆகிய பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்ற பின்னர் குறித்த எச்சரிக்கை ஆவணங்கள் தொடர்பாக குறித்துவைத்த லொக் புத்தகத்தை மாற்றுவதற்க்கு சஞ்சிவ பண்டார தன்னுடன் கலந்துடையாடியதாக தெரிவித்த உபேந்திர அவர்கள், தான் இதற்கு முதல் CID உள்ளிட்ட விசாரணை பிரிவுக்கு வழங்கியது சஞ்சிவ பண்டார தனக்கு அறிவிக்கும்படி கூறியவற்றையாகும் எனவும், இன்றைய தினம் ஆணைக்குழுவின் முன் தான் கூறுவது முழுமையான உண்மை கதை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com