Thursday, December 5, 2019

எதிர்கட்சித் தலைவராக சஜித்!

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிறேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை தழுவிக்கொண்ட சஜித் பிறேமதாஸ தொடர்பாக கட்சியினுள் பல்வேறு முரண்பாடுகள் தோன்றியிருந்த நிலையில் இன்று கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஒன்று கூடலின்போது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சஜித் பிறேமதாஸவை எதிர்கட்சி தலைவராக நியமிப்பதற்கு கட்சியினுள் பலத்த எதிர்ப்பு இருந்துவந்தபோதும் அவர் அப்பதவி கிடைக்காவிடின் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக மிரட்டிவந்ததன் விளைவாக இத்தீர்மானத்திற்கு அனைவரும் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இலங்கையில் பலமானதோர் அரசு அமைந்துள்ள நிலையில் அதற்கு முகம்கொடுக்ககூடிய எதிர்கட்சி ஒன்று அவசியமானதாகும். ஆனால் அதற்கான தலைமைத்துவத்தை சஜித் பிறேமதாஸவால் வழங்கமுடியுமா என்பது கேள்விக்குரியதாகும்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com