Wednesday, December 4, 2019

மைத்திரியின் பாராளுமன்றக் கனவு பொய்யாகின்றது! பா.தேர்தலில் போட்டியிடுவாராம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிற்பார் எனக் கூறப்படுவது பொய் என்றும் அவர் அவ்வாறு பாராளுமன்றிற்கு வர மாட்டார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேக்கர குறிப்பிட்டார்.,BR/>
ஆயினும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பது கட்சிக்குப் பலம் சேர்ப்பது எனவும், ஊழல் அற்ற தலைவர் ஒருவர் கடமையாற்றுவார் எனவும் செயலளார் நாயகம் நம்பிக்கை தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றிலிருந்து கேட்டு விலகவேண்டும் என்று கூட்டணியைச் சேர்ந்த பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், யாரும் அவ்வாறு விலகுவதற்கு விரும்பாததும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com