Wednesday, December 4, 2019

ஏப்ரல் இறுதியில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் ?

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் கட்சித் செயலாளர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. அந்தவகையில் மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் 25 தொடக்கம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.

எனவே இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளில் தற்போது அரசியல் கட்சிகள் ஈடுப்படத் தொடங்கியுள்ளன. அவ்வாறு அடுத்த வருடம் மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com