Monday, December 2, 2019

பாராளுமன்ற கூட்டத் தொடரை நிறுத்தினார் கோட்டாபாய

இலங்கை பாராளுமன்றக் கூட்டத் தொடரை நிறுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அரச அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இன்று(02) நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படவுள்ள பாராளுமன்றக் கூட்டத் தொடரை நிறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் ஒப்பத்துடன் தமக்கு கிடைத்துள்ளதாக அரச அச்சு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாபதி பொறுப்பேற்றவுடன் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இது நடப்பது என்றும் இதன் அர்த்தம் பாராளுமன்றத்த கலைத்தல் ஆகாது எனவும் புதிய ஜனாபதி பிரிதொரு தினத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றி மீண்டும் பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com