Monday, December 9, 2019

மதுபானத்தை விடவும் கோதுமை மாவுப் பொருட்களால் உயிராபத்து அதிகம்! - புதிய கண்டுபிடிப்பு

இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுக்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது மதுபானம் அருந்துவதே எனப் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். என்றாலும் அதற்கு முற்றிலும் வேறுபட்ட ஆச்சரியமான விடயமொன்றை நேற்று முன்தினம் அரசாங்க வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

அந்தச் சங்கமானது குறிப்பிட்டதன்படி, இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களில் 85% மரணங்கள் கோதுமை மாவினால் ஏற்படுகின்றவை எனத் தெரியவருகின்றது.

கோதுமை மாவினால் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதனால் ஏற்படுகின்ற நோய்கள் காரணமாகவே பெரும்பாலான மரணங்கள் நிகழ்கின்றன. என்றாலும் மதுபானம் அருந்துவதால் உடம்புக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றமை மறுக்க முடியாத உண்மையுமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com