Monday, December 9, 2019

ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர் பதவிக்கு மங்கள... அரசியலுக்கு டாட்டா!

முன்னாள் முதலைமச்சரும் ஐக்கிய தேசியக் முன்னணியின் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர அரசியலிலிருந்து ஓய்வுபெற்று, ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் மிக முக்கிய பதவியொன்றிற்காக, நாட்டை விட்டுச் செல்லவுள்ளதாகவும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மங்கள சமரவீரவுக்கு வழங்கப்படவுள்ள பதவியானது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய பதவிகளுக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்களுக்கு ஈடானது எனவும் தெரியவருகின்றது.

அந்தப் பதவி தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமையகத்திலிருந்து வரும்வரை எதிர்பார்த்துள்ள மங்கள சமரவீர, அக்கடிதம் வந்தவுடனேயே தான் அரசியலிலிருந்து ஒதுங்குவது தொடர்பில் செய்தி வெளியிடவுள்ளார்.

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போதும் அதன் பின்னரும் மங்கள சமரவீர பெளத்த மதகுருமார்களை விமர்சித்துப் பேசியமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டி நேர்ந்தது.

அதனால் அவருக்கு அடுத்துவரும் தேர்தலில் அவர் பங்குகொள்ளாதிருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை கட்சியின் மேலிடம் மேற்கொண்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com