Friday, December 6, 2019

ஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களைப்பை சேர்ந்த ஹக்கீம் மொஹமட் றிப்கான் என்ற சந்தேக நபருடன் சேர்த்து 03 பேர் கட்டுநாயக்க சீதுவ பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஹக்கீம் தவிர மற்றவர்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதோடு ஹக்கீம் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 02 வருடங்களுக்கு முன் சவூதி அரேபியாவில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் சீதுவையில் தங்கியிருந்த காலத்தில் மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட நிதி உதவியில் வசித்து வந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பிரபல அரசியல் கட்சியிலுள்ள அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருடனும் தொடர்பு வைத்திருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com