Thursday, December 5, 2019

இன்று க.பொ.த (சா.த) பரீட்சை எழுதினார் ரஞ்சன்... அரசியலிலிருந்து ஒதுங்கப்போகிறாரா?

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணப் பரீட்சை எழுதினார்.

இன்று அவர் ஆங்கிலப் பரீட்சைக்குத் தோற்றியதாகக் குறிப்பிட்ட அவர், சட்டக்கல்லூரிக்காக சாதாரண தரப் பரீட்சையில் திறமைச் சித்தி அவசியம் என்பதால் தான் இன்று பரீட்சை எழுதியதாகக் குறிப்பிட்டார்.

சென்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உ.த பரீட்சைக்கும் அவர் தோற்றியிருந்தார்.

தனது ஒரே இலக்கு சட்டக்கல்லூரியில் சேர்ந்து, சட்ட வல்லுநராக மாறுவதே எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com