Thursday, December 5, 2019

கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக மாற்றுவதற்கு தேசிய கல்வியியற் கல்லூரிகள் அனைத்தையும் பல்கலைக்கழகங்களாக உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும முன்மொழிந்த பிரேரணைக்கு ஏற்பவே அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செயற்படுத்துவதற்குத் தேவையான கல்வியியல் மற்றும் சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காகவும் கல்வி மற்றும் உயர் கல்வியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி ஆசிரியர்களின் தொழில்சார் தகைமையை முன்னேற்றும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்றைய அமைச்சரவைத் தீர்மானம் பற்றி அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com