Sunday, December 15, 2019

சஹ்ரானின் சகா ஒருவன் சிறையிலேயே மரணமடைந்துள்ளான்.

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாஷிமூடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி, நூர் முஹம்மத் வீதியை சேர்ந்த ஜெய்னுலாப்டீன் முஹம்மத் ஜெஸீல் என்கிற நபரே இவ்வாறு மரணமடைந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கொழும்பு வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவருடன் சேர்த்து சகோதரனும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com