Sunday, December 15, 2019

நித்தியானந்தாவின் அரசவையின் வக்கீலாக சிறிகாந்தா நியமனமாம்.. கிழிஞ்சவாயன்..

நித்தியானந்தா! ஆள் சும்மா ஆள் இல்லை கண்டியளே.. ரஞ்சிதாவிலை தொடங்கின ஆள் வந்துட்டு இப்ப நாடொன்றையே விலைக்கு வாங்கிப்போட்டார். நாட்டிடை பெயர் கைலாசாவாம். தேசிய மொழிகள்கள் மூன்றாம். ஆங்கிலம் , சமஸ்கிரதம் , தமிழ் மொழி என்பன அரசகரும மொழிகளாம். ஒரு நாட்டுக்கு உரித்தான தேசிய கீதம், தேசியப் பறவை, தேசிய கொடி என்று தேசியத்துக்கு உரித்தான அத்தனையையும் ஆள் அசத்தலா வடிவமைத்தும் இருக்கிறாராம்.

என்னதான் சொன்னாலும் பாருங்கோ பிராந்திய வல்லரசுக்குள்ளே வல்லரசு ஒன்றை குடும்பி கட்டின சாமி ஒருத்தர் அமைத்துக்காட்டியிருக்கின்றார் பாருங்கோ. ஆனால் அந்த வல்லரசு பாருங்கோ ஆசியாக் கண்டத்திலை இல்லை. அது அமெரிக்கா கண்டத்திலை.. வட அமெரிக்காவிலை உள்ள ஈகுவாடர் என்ற நாட்டுக்கு சொந்தமான தீவு ஒன்றை விலைக்கு வாங்கித்தான் ஆள் இந்த ஆட்டம் போடுது. ஐயன்னா நாவன்னாவிட்டையும் தன்ர நாட்டை உடனடியாக அங்கீகரி என்று கோரிக்கை விடுத்துள்ளார்

நித்தியானந்தாவை இந்திய அரசும் ஊடகங்களும் சும்மா சுற்றிவழைத்து பொக்சுக்குள்ளை விட்டு அடிக்க நிண்டவயள் பாருங்கோ. ஆள் வெளியேறாதமாதிரி பாஸ்போர்டையும் புடிங்கினவையள். ஆனால் ஆள் தனியான பிளைட்டை கொண்டுவந்து வல்லரசுக்கு விளையாட்டு காட்டிப்போட்டு அமெரிக்கக்கண்டத்தில் இந்தியாவின் நிழல் அரசையை உருவாக்கி உன்ர பாஸ்போட்டை நீவைத்துக்கொள் எனக்கு நான் பாஸ்போட் கந்தோரே திறக்கபோறன் என்று வல்லரசுக்கு ஒரு போடுபோட துணிந்துட்டார் சாமியார்.

நேபாளத்துக்கு தனியான பிளைட்டை கொண்டுவந்த சாமியார், தனிய போகல்லை பாருங்கோ, ஆச்சிரமங்களிலிருந்த குஞ்சி குரால்களையும் அள்ளிப்போட்டுக்கொண்டதான் போட்டாராம். இனியென்ன தனியான தீவுல தனியான ராஜ்சியத்திலை தனிக்காட்டு ராஜாவாக சாமியாரிடை விளையாட்டு ஓடும். வல்லரசும் சும்மாவா இருக்கபோகுது? ரஞ்சிதாவோடை விளையாட்டை கைடெக் கிடுன் வீடியோ பொருத்தியெல்லோ போட்டுடைச்சவையள், இனி சட்லைட் கமெரா அது இது என்று தங்கட ஐரி ஸ்பெசலிஸ்டை எல்லாம் கைலாசாவை நோக்கி நகர்த்துவினம்..

என்னதான் என்றாலும் பாருங்கோ அள்ளிக்கொண்டு போயிருக்கின்ற ஆச்சிரமத்து குஞ்சிகுராலுகளுக்கு என்ன நடக்கப்போகுது என்றதுதான் இந்த கிளிஞ்சவாயன்ட கவலை பாருங்கோ.. இது சம்பந்தமா கொஞ்சம் தேடுதலிலை இறங்கினபோது அட கோதாரி என்று போட்டுது. என்ன தெரியுமோ சங்கதி, நித்தியானந்தாவின் அரசவைக்கான வக்கீலாக தமிழருக்கு தமிழீழம் பெற்றுத்தாரம் என்று காதிலை பூ சுத்தின ரெலோவின்ட முதல்வர் சிறிகாந்தாவை நியமிக்கபோகினமாம் என்ற செய்தி கிடைச்சிருக்கு..

இதென்னடா கோதாரி இந்த உலகத்திலை சாமியாருக்கு வேற ஒருவரும் கிடைக்கலையே என்று விசாரிக்கத்தான் சொன்னாங்கள், சிறிக்காந்தாவை மாதிரி சிறுவர் துஷ்பிரயோகம் செய்கிற கழிசடைகளை வேறு ஒருவராலும் காப்பாற்ற முடியாதாம். அண்மையிலையும் யாழ்பாணத்திலை ஒன்பது வயது சிறுமிக்கு மொபைல் போண் வாங்கிக்கொடுத்து அலுவல்பார்த்த ஐயரை விடுவிக்கக்கோரி நீதிமன்றிலை ஒற்றைகாலில் நின்றவராம்.. அப்ப இதைவிட என்ன தகுதி வேண்டுமாம் என்று கேட்கினம் ஆச்சிரமக்காரார். ஏன் தெரியுமோ எதிர்காலத்திலையும் அங்க அள்ளிக்கொண்டு போயிருக்கிற குஞ்சி குரால்கள் குதரப்படேக்க சிறிக்காந்தா தொழிலை அப்படி அத்துப்படியா செய்வாராம் கண்டியளே..

மீண்டும் சந்திப்போம் அன்புடன் கிழிஞ்சவாயன்..
உண்மையுடன் சங்கமமான கற்பனை

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com