Sunday, December 15, 2019

சிறிதரனின் சகாவின் உடந்தையால் 11 வயது சிறுமி வன்புணர்வு! ஊர்கூடி காமுகனின் கடையை எரித்தது.

கரைச்சி பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் தவிசாளர் அ. வேழமாலிகிதனின் நடவடிக்கையால் கிளிநாச்சியில் 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குட்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிறு புடவை கடை ஒன்றை நடத்தி வருகின்ற வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் சட்டவிரோதமாக அனுமதியின்றி தனியார் காணி ஒன்றிற்குள் வியாபாரம் நிலையம் அமைத்து நடாத்தி வருகின்றார். எனவே இவரின் வியாபார அனுமத்தி பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளருக்கு இவ்வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி கடிதம் எழுதியிருந்தார். அத்தோடு அப்பிரதேச பொது மக்களும் வாய்மொழிமூலம் வேழமாலிகிதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோருக்கும் முறைப்பாடு செய்திருந்தனர். அந்த முறைப்பாட்டில் குறித்த நபரின் சமூகவிரோத செயல்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இவர்கள் இருவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு குறித்த நபரால் அப்பிரதேசத்தை சேர்ந்த 11 வயது பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

எனவே குறித்த நபர் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் அதிகாரம் இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதன் காரணமாக ஆத்திரமடைந்த பொது மக்கள் குறித்த நபரை பொலீஸாரிடம் பிடித்துக்கொடுத்துள்ளதோடு, அவரின் கடையினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது



குறித்த பகுதியில் சிறு புடவை கடை நடாத்தி வருகின்ற நபர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அத்துமீறி தனி நபர் ஒருவரின் காணியை பிடித்து வியாபாரம் நிலையம் அமைத்து நடாத்தி வருகின்றார் என்றும் எனவே இது தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளரினால் கடந்த 2017 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கும். 2019 ஆம் ஆண்டு பிரதேச சபையின் தவிசாளருக்கும் குறித்த நபர் சட்டவிரோதமாக கடை நடாத்தி வருகின்றார் எனவே அவரின் வியாபார அனுமதி பத்திரத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார் ஆனால் அக் கடிதத்திற்கு பிரதேச சபையினால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.


இந்த நிலையில் குறித்த நபர் 11 வயது சிறுமியை அச்சுறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதனை பலரிடம் கூறிய போது எவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவரது நடவடிக்கையினை இரகசியமாக வீடியோ எடுத்த பிரிதொரு நபர் அதனை ஆதாரமாக பொலீஸாரிடம் கொடுத்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதோடு, ஆத்திரமடைந்த பொது மக்கள் அவரது கடையினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com