Tuesday, December 24, 2019

புதிய அரசுக்கு எதிராக சஜித் அணி அக்கினிப் போராட்டம்!

புதிய அரசாங்கம் செய்துவரும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து ஐக்கிய தேசிய முன்னணியினர் கொழும்பில் சத்தியாக்கிரகம் ஒன்று முன்னெடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்கா முன்பாக இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தீப்பந்தம் ஏற்றி எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் விடுதலையை வலியுறுத்தி நடத்திய இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பெளத்த தேரர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் விடுதலைக்கான அத்தனை முயற்சிகளையும் தாம் உள்ளிட்ட குழுவினர் எடுத்து வருவதாக கூறினார்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com