Saturday, December 7, 2019

உங்கள் சேவை இனியும் தேவையில்லை. உடனடியாக நாடு திரும்புவீர்! நட்புக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஆப்பு!

30 நாடுகளுக்கான இலங்கைத்தூதர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அவரச அறிவிப்பு விடுத்துள்ளது. இவர்கள் அமைவரையும் தமது பைகளை சுருட்டிக்கொண்டு எதிர்வரும் 30 ம் திகதிக்கு முன்னர் நாடு திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கடந்த அரசாங்கத்தில் அரசியல் மற்றும் தனிப்பட்ட நெருக்கம் காரணமாக தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்களையே இவ்வாறு திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த தூதுவர்கள் தமது கடமைகளை சரியாக செய்தனரா என்பதை கண்டறிய விசாரணைகளை நடத்தவும் வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தூதுவர்கள் நீக்கப்படுவதால், ஏற்படும் வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகளை அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் ராஜதந்திர விவகாரங்கள் சம்பந்தமாகவும் சர்வதேச தொடர்புகள் குறித்து அனுபவமிக்க நபர்கள் வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.

எனினும் தற்போது அரசியல் மற்றும் தனிப்பட்ட நெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், ஜனாதிபதி மற்றும் அரசாங்கங்கள் மாறும் போது தூதுவர்களும் மாற்றப்படுவது இயல்பானது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com