Saturday, December 7, 2019

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக 70000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக 70,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகிறது.

70,957 குடும்பங்களைச் சேர்ந்த 35,906 பேர் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

இதற்கிடையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரத்திலும் பலத்த மழை பெய்யும்.

தீவின் பல இடங்களில் பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

சபராகமுவ, மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகள். 75-100 மி.மீற்றரிற்கும் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னல் மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com