Sunday, December 1, 2019

என் கடைசி மூச்சுவரை அரசியலில் நின்றுபிடிப்பேன்! - முன்னாள் ஜனாதிபதி

“எனது பதவிக்காலம் முடிவடைந்ததனால் சிலர் நினைக்கிறார்கள் என்கதி அதோகதிதான் என்று. இல்லை...இல்லை... நான் அரசியலில் மீண்டும் பிறப்பெடுப்பேன்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் தெரிவித்தார்.

கடந்த கால செயற்பாடுகள் பற்றிய ஜனாதிபதியின் கருத்துக்களுக்காக பொலன்னறுவை புலதிஸி பெளத்த மண்டபத்தில் இடம்பெற்ற மைத்திரிக்கான நன்றி நவிலல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றும்போது,

“தற்போது சிலர் பேசுகின்ற பேச்சுக்களும்... செய்கைகளும் எனக்குத் தெளிவினைத் தந்துள்ளது. அவர்கள் நினைக்கிறார்கள்... எனது பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதால் நான் ஒழிந்துவிட்டேன் என்று. இல்லை... இல்லை... நான் அரசியலில் மீண்டும் பிறப்பெடுப்பேன். எனது உடம்பில் பலம் உள்ளவரை.... எனது கடைசிமூச்சு வரை நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் என்னாலான பணிகளைச் செய்வேன். அதனை இல்லாதொழிக்க எவராலும் இயலாது” எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com