Sunday, December 1, 2019

இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் ஏனைய புலனாய்வுப் பிரிவுகளையும் இணைக்க நடவடிக்கை!

தற்போது நாட்டில் செயற்படுகின்ற அனைத்துப் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளும் இராணுவக் குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஆவனசெய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

முக்கியமாக அரச புலனாய்வு அலகு, தேசிய புலனாய்வுப் பணியகம், மேல்மாகாண புலனாய்வுப் பிரிவு என்ற மூன்றையும் ஒன்றிணைத்து அந்தப் புலனாய்வுப் பிரிவுகளின் தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினூடாக ஆய்வுசெய்து தேடல்களை மேற்கொள்வதே அரசின் திட்டமாக உள்ளது.

கடந்த காலத்தில் புலனாய்வுத் தகவல்களைச் சரியான முறையில் தெரிந்து கொள்வதற்கும், சரியான முறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் முடியாது போனதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன என்று தெளிவாகியிருப்பதால், யுத்தத்தில் மட்டுமன்றி அதன் பிறகும் பாதுகாப்பு தொடர்பில் மாபெரும் பங்களிப்பை நல்கிய இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் குறித்த புலனாய்வுப் பிரிவுகளையும் ஒன்றிணைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com