Saturday, November 2, 2019

MCC ஒப்பந்தத்திற்கு எதிராக உச்ச மன்றில் வழக்கு! அமெரிக்க தூதரகம் நீலிக்கண்ணீர் வடிக்கின்றது.

அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள மிலேனியம் சலன்ஞ் கோப்ரேசன் (MCC) வேலைத்திட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை தடுக்கும் வகையில், உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை மனு சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவுடன் எக்ஸா, எம்சீசீ, சோபா ஆகிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட இடைகால தடை உத்தரவை பிறப்பிக்க கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என அச்சப்படுகின்றே மேற்படி ஒப்பந்தங்களில் இலங்கை அரசை கையொப்பம் இடவைப்பதற்காக நிலுவையிலுள்ள கடன்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களை இதுவரை காலமும் கையிலெடுத்திருந்த அமெரிக்கா தற்போது இலங்கையின் அபிவிருத்தியின்பால் அக்கறைகொண்டே தாம் மிலேனியம் சலேனஞ் கோப்பரேசன் வேலைத்திட்டங்களை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை கீழ்கண்டவாறு செல்கின்றது. இதை வாசிக்கின்றபோது இலங்கையின் சகல துறைகளினுள்ள அமெரிக்க எவ்வாறு சூட்சுமமாக நுழைய முனைகின்றது என்பதை எந்நவொரு சாதாரண பிரஜையாலும் புரிந்துகொள்ள முடியும்..

அனைத்து பங்காளி நாடுகளிலுமான மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷனின் (Millennium Challenge Corporation - MCC) உலகளாவிய கொள்கைக்கு இசைவானதாக, இந்த (கடனற்ற) நிதியுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் இலங்கை அரசாங்கம் அதை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அதன் மூலம், இந்த நிதியுதவி ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய பாராளுமன்றத்துக்கு போதிய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அமெரிக்க தூதரகம் அறிவித்திள்ளது.

இந்த மீளாய்வு காலப்பகுதியில், நிதியுதவி ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான திட்டங்களை தயாரிப்பதற்கும் போக்குவரத்து மற்றும் காணி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டங்களை வடிவமைப்பதற்கும் இலங்கை அரசாங்கம் செயற்படும். இந்த நிதியுதவி ஒப்பந்தமானது 11 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு நேரடியாக நன்மைபயக்கும் என்பதுடன், பொருளாதார வளர்ச்சியையும் அர்த்தபுஷ்டியான வகையில் ஊக்குவிக்கும்.

இந்த நிதியுதவி ஒப்பந்தத்திற்கு அரசாங்கத்தினதும் மக்களினதும் ஆதரவு இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொள்வதற்கு பாராளுமன்றத்தினது மீளாய்வு மற்றும் ஒப்புதல் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷனுக்கு தேவைப்படுகிறது.

மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் போக்குவரத்துத் திட்டம்

போக்குவரத்துத் திட்டமானது 350 மில்லியன் டொலர்களைக் கொண்டது என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதுடன் இது மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகணங்களில் நகர மற்றும் கிராமிய நகரும் தன்மையை இருவழியில் முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். முதலில் கொழும்பு பெருநகரப் பிராந்தியத்தில் காணப்படும் வாகன நெரிசலை எளிதுபடுத்துவதுடன், பொதுப் போக்குவரத்தை முன்னேற்றும். கொழும்பை மேலும் வாழக்கூடிய, நன்கு செயற்படக்கூடிய நகரமாக்குவதற்கு போக்குவரத்து உரிமையைப் பெறுவது முக்கியமானதாகும். இரண்டாவதாக, போக்குவரத்துத் திட்டமானது மேல் மாகாணத்திலுள்ள துறைமுகங்கள் மற்றும் சந்தையுடன் நாட்டின் மத்திய பகுதியை இணைப்பதை மேம்படுத்தும். போக்குவரத்துத் திட்டமானது போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் பொறிமுறைகளை தரமுயர்த்தும். இது மூன்று செயற்பாடுகளைக் கொண்டதாகும்:

* கொழும்பு பெருநகர பிராந்தியத்தின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறைக்காக (Advanced Traffic Management System) 160 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறையானது மத்திய கொழும்பை புறநகர் பகுதிகளுடன் இணைக்கும் அதிக போக்குவரத்துக்களைக் கொண்ட எட்டு பாதைகளில் உள்ள வீதி வலையமைப்புக்களை தொழில்நுட்ப மேம்படுத்தலுடன் பௌதீக ரீதியாக முன்னேற்றுவதுடன், சிவில் வேலைகளை முன்னேற்றுவதாகும். இந்த செயற்பாடானது வாகனங்களை கண்டறிவதற்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல், நிகழ்நேர தகவல் சேகரிப்பு, போக்குவரத்தை ஆய்வுசெய்தல், போக்குவரத்து சமிக்ஞைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தல் மற்றும் முழுமையான வலையமைப்பிலும் பஸ் முன்னுரிமை முறைக்கு இடமளித்தல் என்பன உள்ளடங்குகின்றன. பாதசாரிகள், உலகின் பல நகரங்களில் பொருட்கள் மற்றும் பயணிகள் நகர வீதிக் கட்டமைப்பில் நெரிசல்கள் இன்றி பயணிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முக்கியமான கருவியாக மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறை நிரூபணமாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறையானது கொழும்பு மாகரில் உள்ள 132 சந்திகளில் சிவில் செயற்பாடுகளை முன்னேற்றுவது மற்றும் ஏறத்தாழ 205 கிலோமீற்றர் வீதி வலையமைப்பில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு சமிக்ஞை திட்டங்களை வினைத்தினறாக நடைமுறைப்படுத்துவதையும் மேம்படுத்தும்.

* 50 மில்லியன் டொலர்கள் கொழும்பு மாநகரில் பஸ் சேவையை மேம்படுத்த பஸ் சேவை நவீனயப்படுத்தல் செயற்பட்டுக்கு ஒதுக்கப்படும். கொழும்பு மாநகரில் உள்ள பயணிகளில் 45 வீதமானவர்களே பஸ் சேவையைப் பயன்படுத்துவதுடன், குறைந்தவருமானம் பெறும் நபர்களாலேயே இது அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயற்பாடானது ஸ்மார்ட் அட்டையின் அடிப்படையில் தன்னிச்சயாக கட்டணங்களை அறவிடும் பொறிமுறையை அறிமுகப்படுத்தும். ஒரு அட்டையை பல்வேறு வழித்தடங்களில் செல்லும் பஸ்களுக்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமைவதுடன், பஸ்கள் சரியான முறையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனவா என்பதைக் கண்டுகொள்வதற்காக ஜிபிஸ் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதும் இதில் அடங்குகிறது. சரியான நேரசூசியில் பஸ்கள் செயற்படுகின்றனவா, பஸ்களில் பயணிக்கும் பெண்கள், வயது வந்தவர்கள், மாற்றுவலுவுடையவர்கள் மற்றும் அங்கவீனமானவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் இது உதவியாகவிருக்கும். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் செயற்பாட்டாளர்கள் அதிநவீன போக்குவரத்துக்கான புதிய பஸ்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஏற்பாடுகளை செய்வதற்கு மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் உதவியளிக்கும்.

* 140 மில்லியன் கிராமிய போக்குவரத்து செயற்பாடானது மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகணங்களுக்கிடையிலான ஏறத்தாள 131 கிலோமீற்றரைக் கொண்ட மத்திய வளைய வீதி வலையமைப்பை மேல் மாகாணத்தின் சந்தைகள் மற்றும் துறைமுகங்களுடன் இணைப்பதை மேம்படுத்தும். மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் பல்வேறு பிரிவு வலையமைப்புக்களை புனரமைக்கும். கிழக்கு மாகாணத்திலுள்ள பயணிகள் மற்றும் பொருட்கள் இந்த வலையமைப்பின் ஊடாகப் பயணப்படும். இந்த வலையமைப்பை மேம்படுத்துவது விவசாயம், சுற்றுலாத்துறை என்பவற்றின் மையமாகவிருக்கும் மத்திய பிராத்தியத்துக்கும், அங்குள்ள இன பல்வகைமை மற்றும் வறுமைநிலையில் உள்ள அதிகமானவர்களுக்கும் நன்மையாக அமையும்.

மிலேனியம் சலெஞ்ச் காணித் திட்டம்

காணித் திட்டமானது 67 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டது என மதிப்பிடப்பட்டிருப்பதுடன், இடஞ்சார் தகவல்கள் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் காணி உரிமைத் தகவல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளை விஸ்தரிப்பது மற்றும் முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். இந்தத் திட்டமானது பயன்படுத்தப்படாதுள்ள அரசாங்க காணிகளை அடையாளம் கண்டு அவற்றை முடிந்தளவு வினைத்திறனாகப் பயன்படுத்தவும், அவற்றை அரசாங்கம் குத்தகைக்கு வழங்கி ஆகக்கூடியளவு வாடகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவியாகவிருக்கும். அத்துடன் பணிக்காலப் பாதுகாப்பு மற்றும் சிறுகாணி உரிமையாளர்கள், பெண்கள் நிறுவனங்களுக்கான காணி வர்த்தகத்தன்மை என்பவற்றை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட காணி உறுதிகளைப் பேணவது போன்றவற்றால் பாதிப்புக்கள், திருட்டுக்கள், இழப்புக்களிலிருந்து தவிர்த்தல் என்பவற்றுக்கு உறுதுணையாக இருப்பதுடன், தலைப்புப் பதிவு முறையிலிருந்து காணி உறுதி முறைக்கு சொத்துக்களை மாற்றுவதாகும். காணித் திட்டமானது ஐந்து செற்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள முயற்சிகளை மேம்படுத்துவதாக இவை அமையும். அவையாவன:

* நிலம் தொடர்பான காணி வரைபடத்தை உருவாக்குவது மற்றும் அரசாங்க காணிகள் குறித்த முழுமையான இருப்புக்களைப் பெறுதல், ஈ-அரச காணிகள் தகவல் முகாமைத்துவ முறைமைக்கு தகவல்களை வழங்குதல். மதிப்பீடு 23,400,000 டொலர்கள்;

* கணினி மயப்படுத்தப்பட்ட வெகுஜன மதிப்பீட்டுக்கு உதவியாக அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான தகவல் சேகரிப்பை மேம்படுத்துதல், மதிப்பீட்டுத் திணைக்களத்தைப் பலப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பலப்படுத்துதல். மதிப்பீடு 6,5000, 000 டொலர்கள்;

* காணி உறுதி பதிவேட்டில் உள்ள பதிவுகளை டிஜிட்டல் மயப்படுத்தி மேம்படுத்தல், டிஜிட்டல் தகவல் கட்டமைப்பில் அவற்றை இணைத்தல், அரசாங்கத்தின் ஈ-பதிவு முயற்சிகளைக் கட்டியெழுப்புதல். மதிப்பீடு 11,400,000 டொலர்கள்;

* காணி உறுதி முறையிலிருந்து தலைப் பதிவேட்டு முறைக்குச் சொத்துக்களை மாற்றுவதன் ஊடாக காணி உரிமையாளர்களின் உரிமையை மேம்படுத்தல். அரசாங்கத்தின் பிம் சவிய திட்டத்தை விஸ்தரித்தல். மதிப்பீடு 19,300,000 டொலர்கள்;

* காணி நிர்வாக கொள்கைத்திட்டங்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கான ஆய்வுளுக்கு உதவியளித்தல். மதிப்பிடு 6,700,000 டொலர்கள்;

ஈ-அரச காணிகள் தகவல் முகாமைத்துவ முறைமை என்பது அரசாங்கத்தின் பல்வேறு முகவர்களிடம் உள்ள அரச காணிகள் தொடர்பான காணி வரைபடைத்தை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப பொறிமுறையாகும். இந்தப் பொறிமுறையானது அரசாங்கம் ஏற்னவே குத்தகைக்கு வழய்கிய அரச காணிகள் குறித்த தகவல்கள் பற்றிய விண்ணப்பங்களை பின்தொடர்ந்து அவற்றிலிருந்து வருமானங்களை சேகரித்துக் கொள்ளும். அரசாங்கம் தற்பொழுது காணி மதிப்பீட்டு செயற்பாட்டை தானியங்குமுறைக்கு மாற்றி வருகிறது. இது வரி மதிப்பீடு மற்றும் ஏனைய தேவைகளுக்காக சொத்துக்கள் மதிப்பிடப்படுவதை விரைவுபடுத்தும். ஈ-காணி பதிவேடு முறைமையானது காணி பதிவுத் தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்துவதுடன், காணி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கான தகவல்களை இலகுவாகப் பெற்றுக் கொடுப்பதற்கும் வழிகோலும். பிம் சவிய திட்டமானது தனியார் காணிகளை காணி உறுதி முறையிலிருந்து மிகவும் பாதுகாப்பான தலைப்பு பதிவு முறைக்கு மாற்றுவதாகும். துரதிஸ்டவசமாக போதிய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இன்மையால் இந்த முயற்சிகள் யாவும் அங்கும் இங்குமாக இழுபடுவதுடன் சரியான ஒருங்கிணைப்பின்றிக் காணப்படுகின்றன. மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் காணி திட்டமானது இந்த வளப் பிரச்சினையை நிவர்த்திசெய்யும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com