Saturday, November 2, 2019

குருகந்த - நயாரு விகாரையின் தற்காலிகப் பொறுப்பாளர் தாக்குதலுக்குள்ளானார்!

முல்லைதீவு - நயாரு குருகந்த ரஜமகா விகாரையைத் தற்காலிக பொறுப்பாளராக இருந்த தன்னை நேற்றுப் பிற்பகல் இளைஞர் ஒருவர் தாக்கியதாக தற்காலிகப் பொறுப்பாளர் கெலும் பண்டார எனும் இளைஞர் தெரிவித்துள்ளார்.

கோயில் வளாகத்தில் பூஜைக்காக வந்திருந்த குழுவொன்றின் இளைஞர் ஒருவரே தன்னைத் தாக்கியதாக கெலும் பண்டார தெரிவித்துள்ளார்.

ட்ரக்டர் வாகனமொன்றில் ஏதோவொரு தெய்வத்தின் சிலையை எடுத்து வந்த குழுவினர் தன்னைப் பற்றி விசாரித்ததாகவும், வந்த குழுவினர் என்னதான் செய்கின்றார்கள் என்பதை விசாரித்தற்காகவும், அவர்களது செய்கைகள் தொடர்பில் கைத்தொலைபேசி மூலம் 'விடியோ' எடுத்தற்காகவும், வந்திருந்தோரில் ஒரு இளைஞர் தன்னிடம் வந்து தன்னைத் தாறுமாறாகத் தாக்கியதாக விகாரைக்குத் தற்காலிகமாகப் பொறுப்பான இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழுவினர் தன்னைத் தாக்கியது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக தான் முல்லைத்தீவு பொலிஸிற்குச் செல்ல வேண்டிய தேவை இருக்கின்றபோதும், போக முடியாத இக்கட்டான நிலையில் தான் இருப்பதாக நிருபர்களிடம் அவ்விளைஞர் தெரிவித்துள்ளான்.

மேற்படி குழு தன்னை மறைந்திருந்து தாக்கலாம் என்ற அச்சம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளான்.

இதற்கு முன்னர் ஒருமுறை வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் டி. ரவிஹரன் உள்ளிட்ட சிலரும் தன்னை அச்சுறுத்தியதாக அவ்விளைஞர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com