Monday, November 18, 2019

பாலில் விஷம் கலந்தது. அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா அனுராதபுரத்தில்..

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவிப்பிரமானம் செய்துகொண்ட நிகழ்விற்கு அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்கள் சாடுகின்றது. அங்கு சென்றிருந்த ஹிஸ்புல்லாவை கண்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தோர் அருவருத்துள்ளதுடன் பாலில் விஷம் கலக்க அனுமதிக்க முடியாது என ஹிஸ்புல்லாவின் காதில் கேட்குமளவுக்கு அவரின் வருகைக்கு எதிர்ப்பைகாட்டியதாக அறியமுடிகின்றது.

அதேநேரம் எதிர்வரும் அரசாங்கம் எவ்வாறு அமையவேண்டும் என வடிவமைக்கும் செயற்பாட்டாளர்கள் எத்தருணத்திலும் அடிப்படைவாதிகள் எவருக்கும் புதிய அரசில் இடமளிக்கக்கூடாது என்ற ஒருமித்த முடிவில் உள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com