Monday, November 18, 2019

ஸ்ரீசுக மத்தியகுழு கூடுகின்றது. தலைமைப் பொறுப்பை மைத்திரி பாரமெடுக்கின்றார். பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு..

தேர்தலில் நடுநிலைமை வகிக்கும்பொருட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை, ரோஹண லக்ஷ்மன் பியதாஸவிடம் ஒப்படைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கட்சியின் தலைமைப்பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக அறியமுடிகின்றது.

இன்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு தமைமைப்பதவியை அவரிடம் பாரமளிக்கும் என தெரியவருகின்றது. அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாக இன்றைய ஒன்றுகூடலில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன செய்துகொண்ட ஒப்பந்தத்தில் பொதுத்தேர்தலில்போது, கைச் சின்னத்தில் போட்டியிடுவது என தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com