Wednesday, November 20, 2019

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்! ரீஎன்ஏயின் சூடு தணிகிறது!

நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் எனவும், அனைத்து இனங்களினங்களையும் சரிசமமாக மதிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்ட கருத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று வெகுவிரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள 'ரெலோ' அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றும்போது, இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து அமைப்புக்களினதும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்திக்கவிருப்பதன் நோக்கம், தற்போதைய ஜனாதிபதியின் நம்பிக்கைதரும் சிறந்த பேச்சிற்கெனவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் என பா.உ. மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com