Friday, November 22, 2019

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் இறந்த தன் மகனுக்கு இழப்பீடு கோருகின்றனர் அமெரிக்கப் பெற்றோர்!

யிர்த்த ஞாயிறுத் தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த 11 வயதுடைய தனது மகனுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்கப் பிரசைகளான பெற்றோர் நேற்று (22) உயர்நீதிமன்றத்திற்கு மனுவொன்றினை அனுப்பிவைத்துள்ளனர்.

எலக்ஸாண்டர் எரொவ் மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த மனுவில், அதிகாரம்மிக்கோரின் கவனயீனக் குறைவினால் நிகழ்ந்த இந்த குண்டுத் தாக்குதல் மூலம் தனது மகனின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்ற விடயத்தை வெளியிடுமாறும் கோரியுள்ளனர்.

சென்ற ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு சினமன் கார்டன் ஹோட்டலின் ஏற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த தனது மகன் கொலையுண்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, பதில் கடமையாற்றும் பொலிஸ் மாஅதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பிரனாந்து உள்ளிட்டோரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com