Saturday, November 23, 2019

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை நிராகரித்தார் அட்மிரல் சரத் வீரசேகர.. தவராசாவின் விண்ணப்பம் நிராகரிப்பு..

ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றத்தை தொடர்ந்து இலங்கையின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்களும் மாற்றப்பட்டு பல மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வட-கிழக்குக்கான ஆளுனர்களை நியமிப்பதில் தொடர்ந்தும் முடிவுகள் எட்டப்படாத நிலை காணப்படுகின்றது.

கிழக்கின் ஆளுநராக ஓய்வு பெற்ற கடற்படை உயரதிகாரியும் முன்னாள் அமைச்சருமான அட்மிரல் சரத் வீரசேகர நியமிப்பதற்கு ஜனாதிபதி விருப்பை தெரிவித்திருந்தபோதும் அதனை சரத் வீரசேகர நிராகரித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்று கலைக்கப்பட்டு புதிய தேர்தல் இடம்பெறவுள்ளது. அத்தேர்தலில் போட்டியிட தயாராகிக்கொண்டிருக்கும் அவர் குறுகியகாலத்திற்காக அப்பதவியினை பெற்றுக்கொள்வதில் அர்த்தம் இல்லை எனக் கருதுவதாக அறியக்கிடைக்கின்றது.

அதன் அடிப்படையில் பெரும்பாலும் திஸ்ஸவித்தாரண அப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றது.

இதேநேரம் வடக்கின் ஆளுநராக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் முக்கியஸ்தர் தவராசாவை நியமிக்குமாறு அக்கட்சியினர் வேண்டுதல் விடுத்தபோதும், ஈபிடிபி க்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் ஆளுநர் பதவியையும் வழங்கமுடியாது என நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com