Tuesday, November 12, 2019

நான் மக்களுக்கு மாத்திரமே பொறுப்புக் கூற வேண்டியவனாக உள்ளேன் – கோட்டாபாய

மக்களுக்கு மாத்திரமே பொறுப்புக் கூற வேண்டியவனாக உள்ளேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஸவை தேர்தல் தொடர்பான விவாதத்திற்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்தார்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஸ எந்ததொரு பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் தனியார் ஊடகமொன்று வழங்கிய நேர்காணலில் சஜித்தின் அழைப்புக்கு கோட்டாபய மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:

எனது கொள்கைகளை பொதுமக்களிடம் கூறியுள்ளேன். அத்துடன் இந்த மாதிரியான விவாதங்களில் கலந்துகொள்வதினால் எந்ததொரு பயனும் ஏற்படப்போவதில்லை.

என்னை போன்று மக்களிடம் ஏனைய வேட்பாளர்களும் தங்களின் கொள்கைகள் தொடர்பாக கூற முடியும்.

குறித்த கொள்கைகள் அனைத்தையும் கவனத்திற்கொண்டு மக்களே இறுதியாக முடிவு எடுப்பார்கள் அத்துடன் உண்மையாகவே சேவையாற்றக்கூடியவர்கள் யார்? அல்லது திறமையற்றவர்கள் யார்? என்பதை மக்கள்தான் இனங்கண்டு அதற்கமைய செயற்பட வேண்டும்.

இதேவேளை நான், ஏனைய தேர்தல் வேட்பாளர்களின் பெயரை தவறாக பிரயோகித்து இழிவான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கவில்லை.

தங்களை அதிகமாக சோதனை செய்தார்கள் என பொய்களை கூறினாலும் நான் அவர்கள் குறித்து பேசவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com