Tuesday, November 12, 2019

ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு நீதிமன்றை அவமதிக்கும் செயலாகும் - மஹேஷ்!

ரோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளப்படுவது பொருத்தமில்லை. நீதிபதிகள் தீர்பொன்றை வழங்குவதாக இருந்தால் அது சாதாரணமாக வழங்கமாட்டார்கள். அதனால் நீதிமன்றத்துடன் தொடர்புபட்ட விடயங்களை நீதிமன்றங்களுக்கே அதனை விட்டுவைக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றும் கூறினார்.

தேசிய மக்கள் கட்சி தேர்தல் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com