Tuesday, November 12, 2019

பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஆளுநர்களை இடைநிறுத்துமாறு ஜனாதிபதியை கோருகின்றார் மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படும் நான்கு ஆளுநர்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோட்டாபயவின் தேர்தல் பிரச்சாரத்தில் நான்கு ஆளுநர்கள் பகிரங்கமாக செயற்படுவதாக, தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளால் மஹிந்த தேசப்பிரியவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்தே, ஜனாதிபதியிடம் இந்த விடயம் குறித்து கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பிட்ட நான்கு ஆளுநர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு தகவல் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com