Tuesday, November 19, 2019

மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா பயணமாகிறார் ஜனாதிபதி கோட்டாபய!

இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை, உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு தங்களது நாட்டுக்கு வருகைதருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இந்த அழைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்குப் பிரயாணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜயசங்கர் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவருடன் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவரும் வருகை தந்துள்ளனர்.

அவர்கள் இன்று பிற்பகல் 4.20 மணிக்கு இந்தியாவில் புதுடில்லியிலிருந்து ஏ.ஐ. 281 விமானத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com