Tuesday, November 19, 2019

பாராளுமன்றம் கலைத்தல் பற்றிய தீர்மானம் நாளை!

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடாத்துவது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையின் கீழ் இன்று (20)நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றக் கட்டிடத் தொடரில் நேற்று (18) இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி நீண்ட உரையாடலொன்றை நடத்தியுள்ளார்.

பாராளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச ஆரதவு பாராளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த வருடம் மார்ச் வரை அரசாங்கம் தொடர்ந்து இயங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்தைப் புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைத்தல், மிக விரைவில் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தனித்தனியாகவன்றி, குழுவாக அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான பிரேரணைகளில் பொருத்தமானதை செயற்படுத்துமாறும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அந்தக் கருத்தினை ஆமாேதித்துள்ள பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர் கூட்டத்தின்போது எடுக்கப்படவுள்ள முடிவின்படி செயற்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்தை நடத்துவது குறித்து புதிய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடியதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அந்தக் குழுவினரும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

62 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட உரையாடல் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெற்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com