Sunday, October 27, 2019

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முஸ்லிம்களையும் குறிவைத்ததே! - அநுர குமார

சஜித் பிரேமதாசவின் மேடைகளில் அடிப்படைவாதிகளே நிறைந்திருக்கிறார்கள். சஜித்திற்கு வாக்களிப்பதன் மூலம் அடிப்படைவாதத்தை அழிக்கவே இயலாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஏறாவூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கத்தோலிக்கர்களை மட்டுமே குறிவைத்து நடாத்தப்பட்டதல்ல... முஸ்லிம்களையும் குறிவைத்தே நடாத்தப்பட்டது.

தான் ஒருபோதும் இனவாத, மதவாத, அடிப்படைவாதம் சார்ந்தவர்களை அரசியல் நடிவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளவே மாட்டேன். அடிப்படைவாதத்தைத் தோற்கடிக்காமல் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது' எனவும் குறிப்பிட்டார்.

மேலும், சஜித்தும் கோத்தபாயவும் நல்ல நண்பர்கள் என்பதால் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கவுள்ள வாக்கினை கோத்தாவுக்கே அளிக்கலாம் எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com