Sunday, October 27, 2019

வெளிநாட்டுச் சக்திகளுக்கு அடிபணியாத தலைமைத்துவமே எமக்குத் தேவை! - அபயதிஸ்ஸ தேரர்

வெளிநாட்டுச் சக்திகளுக்குத் தலை சாய்க்காத தலைமைத்துவத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

'வியத்பவுர' எனும் அமைப்பு நேற்று வவுனியாவில் நடாத்திய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் உரையாற்றும்போது,

'ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் மேல் ஏறி அமெரிக்கா இங்கு உள்நுழையப் பார்க்கின்றது.

நல்ல நேரத்திற்கு மக்கள் அவசரப்பட்டு முஸ்லிம்களைத் தாக்கச் செல்லவில்லை.

இரண்டு வாரங்களுக்குப் பிறகே பிரச்சினைகளை மேற்கொண்டார்கள். மக்களை உசுப்பேத்துவதற்கான செயல் இதுவென்று உங்களுக்குத் தெரியவில்லையா?

மக்களை உசுப்பேதுவதேயன்றி வேறில்லை.... வெளிநாட்டுச் சக்திகளுக்குச் சோரம் போகாத தலைமை எதுவென்று தீர்மானிப்போம்... அந்தத் தலைமையைத் தேர்ந்தெடுப்போம்' எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com