Sunday, October 27, 2019

இன்று தீபத்திருநாள்!

முழு உலகிலும் இன்று இந்து பக்தர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

'தீப ஆவளி அல்லது தீப வரிசை' எனும் கருத்துடன் கூடிய உற்சவமாகவே இந்துக்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

இன்று தீபாவளியை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார். அதில், 'தீபாவளியின் உட்கருத்து என்னவென்றால் அசுரர்களைத்தோற்கடித்து, மக்களுக்குச் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த வரலாற்று புகழ்மிக்க நாள் இதுவாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில், மனிதம் அரசோச்சி சாந்தி சமாதானம் மலர்ந்து அனைத்து மக்களும் தங்களை மட்டுமே கருத்திற் கொள்ளாது அடுத்தவர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை தீபாவாளி உணர்த்துகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

தீபாவாளியை முன்னிட்டு அனைத்து இந்துப் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் (முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த) நாளை விடுமுறை வழங்குவதற்கு கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்நாளுக்குப் பதிலாக பிறிதொரு நாளில் பாடசாலை நடாத்தப்பட வேண்டும் என பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு உலகிலும் வாழும் இந்துமக்கள் சாந்தி சமாதானத்துடனும் விட்டுக்கொடுப்புடனும், பிற மதத்தவர்களையும் மதித்து நடந்து சிறப்புற்றோங்க எமது 'இலங்கைநெற்' இணையத்தளம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்காள்கிறது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com