Thursday, October 10, 2019

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவி மைத்திரிக்கு...

ஜனாதிபதித் தேர்தல் காலப் பிரிவுக்கு மாத்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்தியஸ்தம் வகித்தாலும், பின்னர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, கட்சி பலம் பொருந்தியதாக ஆவதற்குப் பங்களிப்பு நல்குவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிரி ஜெயசேக்கர குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைப் பதவியிலிருந்து முழுமையாக நீங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது, கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது தொடர்பிலான முடிவுக்கு ஜனாதிபதி தனது முழு விருப்பையும் தெரிவித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

கைச்சாத்திட்ட ஒப்பந்தம் தொடர்பில் அதனையும் வாசித்துப் பார்த்து, அதற்கும் அனுமதியளித்தார் எனவும், ஜனாதிபதித் தேர்தலின்போது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமைச்சரவைத் தலைவராகவும், ஜனாதிபதி சுயேட்சையாகச் செயற்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com