Thursday, October 10, 2019

தேர்தலில் வாக்களிக்கும்போது லஸந்த விக்கிரமசிங்க போன்றோரை மறக்க வேண்டாம்! ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

'நாட்டின் அரசியல்வாதிகளும், பலம்பொருந்தியவர்களும், பெரியோர்கள் என்று தங்களை இனங்காட்டிக் கொள்வோரும் குறிக்கோளுடனும் குறிக்கோளின்றியும் விமர்சனம் செய்து, அவற்றை வெளிக்கொணர முடியும் என்பதை யாரும் மறக்கக் கூடாது.' என இன்று ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய இலங்கை எனும் தொனிப்பொருளில் காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

'உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும். உண்மையை வெளிக்கொணரச் சென்று உபாலி தென்னகோனுக்கு நடந்த கதி... லசந்த விக்கிரமதுங்கவுக்கு நடந்தகதி... கீத் லோயர் ஊடகவியலாளருக்கு நடந்த கதி.. எக்னெலிகொடவுக்கு நடந்த கதி....போத்தல ஜயந்தவுக்கு நடந்த கதி... ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களிடம் ஒரு விடயத்தைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கும்போது ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க பற்றி மறக்க வேண்டாம்.

அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி, மரணங்களைத் தழுவி நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட தாக்குதல்கள் பற்றி யாரும் மறந்துவிட வேண்டாம். ஊடகவியலாளர்கள் என்பவர்கள் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் காவல் தெய்வங்கள்... அவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளும் யுகம் எங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. நாங்கள் இன்னுமின்னும் மனித வளங்களைப் பலப்படுத்த வேண்டும். தகவலறியும் உரிமை இன்று நாட்டின் சட்டமாக மாறியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்ற நான் அதில் வெற்றிபெறச் செய்வதற்கு ஆவன செய்யுமாறு கூறுவதற்குக் காரணம் நாட்டைச் சீரிய முறையில் கட்டியெழுப்புவதற்காகவேயாகும்' எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com