Monday, October 14, 2019

கோத்தா - கருணா இருவரதும் உயிருக்கு அச்சுறுத்தல்...! அஜித் பிரசன்ன விடயத்தை வெளிச்சத்திற்கு கொணர்கிறார்!

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இருவரதும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புடைய ஒருவர் தன்னிடம் கூறியதாக தாய்நாட்டிற்காக இராணுவத்தினர் அமைப்பின் அமைப்பாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேஜர் அஜித் பிரசன்ன தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கோத்தபாய ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகச் சொன்னார்கள். நான் ஏன் என்று கேட்டேன். பெண்ணொருவர் முகநூலில் பதிவிடுகிறார். நாட்டைப் பாதுகாக்க முடியுமான ஒருவர் கோத்தபாயவே என்று. அப்போது அவருக்குத் தொலைபேசி அழைப்பொன்று வருகின்றது.

கோத்தபாயவுக்கு பந்தம் பிடிப்பது எதற்காக என்று. அதற்கு அந்தப் பெண் கோத்தபாய வெற்றிபெறுவார் எனக் குறிப்பிடுகிறார். கோத்தபாய உயிரோடு இருந்தால்தானே அவர் வெற்றிபெறுவார் என அடுத்த பெண் கூறுகிறார். அதாவது உயிர்வாழ்வது சந்தேகமே என்கிறார். அண்மைய காலம் வரை அவர் இலங்கையில்தான் இருந்தார்.

பயங்கரவாதியொருவர் அக்காலகட்டத்தில்தான் அவரைச் சந்திக்கிறார். இவரது உயிருக்கு உத்தரவாதமில்லை... புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டதிற்கு ஏற்ப, கோத்தபாயவினதும் கருணாவினதும் உயிர் ஆபத்தான நிலையிலே இருக்கின்றது. கருணா கோத்தாவுக்காக இறங்கி வேலை செய்கின்றார்'

என சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com