Monday, October 14, 2019

யாழில் 15 கிலோ கிளைமோர் குண்டுகள் இரண்டு கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் கொண்டாவில் வரணி பிரதேசத்திலுள்ள இடமொன்றில் புதைக்கப்பட்டிருந்த 15 கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டுகள் இரண்டு இன்று (14) பிற்பகல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்தார்.

கிளிநொச்சிப் பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியமொன்று நடாத்திச் சென்றமை தொடர்பில் கைசெய்யப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களில் ஒருவரான ஜோசப் பீட்டர்ரொப்ஸன் என்பவரிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொள்ளும்போது, வெளிவந்த தகவலுக்கேற்பவே இந்த குண்டுகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் மற்றும் அவரது மனைவி, சகோதரி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com