Thursday, October 3, 2019

ஜனாதிபதி வேட்பாளர்கள் வராமல் கதவை இழுத்து மூடுகிறார் மெல்கம் ரஞ்சித்

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தன்னைச் சந்தித்து உரையாட வருவதற்கு விருப்புத் தெரிவித்துள்ளமையை, கார்டினல் மெல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் எந்தவித ஆய்வுகளும் ஒழுங்காக நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டு, அதற்காகத் தான் எந்தவாெரு வேட்பாளருடனும் கதைக்கத் தயாராக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் .ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களினால் வந்த அழைப்புக்களை கார்டினல் நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா கத்தோலிக்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ஜூட் கிரிஷாந்த கார்டினலிடம் தேர்தல் தொடர்பில் கருத்தினைக் கேட்டபோதே, அவர் அவ்வாறு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் காலப்பிரிவில் நாடளாவிய ரீதியில் கிறித்தவப் பள்ளிகளுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கார்டினல் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். அதற்கேற்ப, ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரிடம் கார்டினலின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கு ஆவன செய்யுமாறு கோரியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com