Thursday, October 3, 2019

குருகந்த தேரரின் இறுதிக் கிரியைகளை நடாத்தியோரைக் கைதுசெய்யக் கோருகிறார் சம்பந்தன்!

முல்லைத்தீவு குருகந்த விகாரையின் விகாராதிபதி இறுதிக் கிரியைகளை நடாத்தியோரைக் கைதுசெய்யுமாறு தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் கடமையிலிருந்தும் சரிவரத் தங்கள் கடமையை நிறைவேற்றவில்லை எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஆயினும் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாத விடுதலைப் புலிகளின் தலைவர்களை பிரசித்தமான முறையில் நினைவுகூர்ந்து, சட்டத்தைத் தகர்த்தெறிந்துள்ளதாக வடக்கிலிருந்து கிடைக்கப்பெற்ற நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் குறிப்பிடுகின்றன. அண்மையில் வடக்கில் தீலிபன் எனும் புலி இராணுவ வீரரின் நினைவுகூர்தல் நிகழ்வும் நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக பொலிஸாரின் அனுமதி பெறப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com