Monday, October 28, 2019

அல் பக்தாதி கொல்லப்பட்டதில் அமெரிக்க ரஷ்யா விடையே முரண்பட்ட கருத்துக்கள். வழிவிடவில்லை என்கிறது ரஷ்யா!

இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படுகின்ற ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

அமெரிக்க புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல்களையடுத்து வடமேற்கு சிரியாவில் பக்தாதியின் மறைவிடத்தை நோக்கி அமெரிக்காவின் ஹெலிகொப்டர்களும், விமானங்களும் வான்வளி தாக்குதல் நடாத்தியதாகவும், விமானத்தாக்குதலில் இருந்து அவர் தப்பிச்செல்ல முற்பட்டபோது அப்பிரதேசத்தை அமெரிக்க தரைப்படைகள் சுற்றிவளைத்ததாகவும், தப்பிச்செல்ல முடியாமல் வேறு வழியின்றி தனது உடலில் அணிந்திருந்த தற்கொலை அங்கியை வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அல் பக்தாதி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அதிலும் சில குழப்பங்கள் காணப்படுகின்றது. அதாவது இந்த இராணுவ நடவடிக்கைக்கு செல்லும்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை கடந்து சென்றதாகவும் அதற்காக அனுமதி வழங்கிய ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தது.

ஆனால் அவ்வாறு எந்தவொரு அனுமதியையும் தாங்கள் வழங்கவில்லை என்றும், அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதென்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கருத்தினை ரஷ்யா மறுத்துள்ளதாலும், கடந்த காலங்களிலும் பக்தாதி கொல்லப்பட்டார் என்று பல தடவைகள் அமெரிக்கா அறிவிப்பு செய்ததுமேதான் இந்த குழப்பத்துக்கு காரணமாகும். எதுஎவ்வாறாகவிருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதியே நேரடியாக பக்தாதியின் மரணத்தை உறுதிப்படுத்தும்போது அதனை நாங்கள் மறுதலிக்க முடியாது.

ஒசாமா பின் லேடன் அமெரிக்காவினால் கொல்லப்பட்டபின்பு அல்கொய்தா இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்களில் ஒருவராக இருந்த ஈராக்கை சேர்ந்த அபூபக்கர் அல் பக்தாதி என்பவன் ஐ.எஸ் இயக்கத்தை ஆரம்பித்திருந்தான் என்பதும் பின்னர் அவன் அமெரிக்காவினதும் யூதர்களினதும் செல்லப்பிள்ளை என்றும் பிரச்சராங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதும் யாவரும் அறிந்த விடயங்கள்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com