Monday, October 28, 2019

என்னை நம்புங்கள் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவேன். யாழில் திருநீற்றுப்பட்டையுடன் கோத்தா

இந்த நாட்டிலே உங்களிடம் வாக்குகளை பெற்றுக்கொண்டவர்கள் யாவரும் உங்களை காலம் காலமாக ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். ஆனால் என்மீது நம்பிக்கை வையுங்கள் நான் உங்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். நான் வரலாற்றில் உறுதிமொழி கொடுத்தவற்றை நிறைவேற்றிக்காட்டியிருக்கின்றேன் என தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.

இன்று யாழில் நடந்த பிரச்சார கூட்டத்தில், கோட்டாபய உரையாற்றியபோது, மேற்கண்டவாறு கூறியுள்ள அவர் அங்கு பேசுகையில்:

வணக்கம், தீபாவளி வாழ்த்துக்கள்

சுதந்திரத்திற்கு பின்னர் இருந்த அரசியல்வாதிகள் நிறைவேற்ற முடியாத உறுதிமொழிகளை வழங்கியதால், உங்களிற்கு எம் மத்தியில் நம்பிக்கையில்லாமல் போயிருக்கலாம். அனால் நீங்கள் என்னில் நம்பிக்கை வைக்கலாம். நான் பொறுப்பேற்ற அனைத்தையும் 100 வீதம் நிறைவேற்றியிருக்கிறேன்.

நான் தேர்தல் விஞஞாபனத்தில் உங்களின் பிரச்சனையை தீர்ப்பதாக கூறியிருக்கிறேன். நான் ஆட்சிக்கு வந்ததும் உங்களின் அனைத்து பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன். உங்களில் சில தலைவர்கள், இன்னும் உங்களை கடந்தகாலத்திலேயே வைத்திருக்கிறார்கள். நான் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறேன். நான் உங்களிற்கு சகல சௌபாக்கியங்கழளையும் பெற்று தருவேன்.

நீங்கள் இங்கு காணும் அபிவிருத்தி அனைத்தும் மகிந்த ராஜபக்ச காலத்திலேயே நடந்தது. வீதிக்கட்டமைப்பு, புகையிரதம், மின்வசதி அனைத்தும் அவர்கள் காலத்திலேயே நடந்தது. 2009 இன் முன்னர் இங்கு பல இராணுவ முகாம்களும், இராணுவத்தினரும் இருந்தனர். ஆனால் 2009 இன் பின்னர் இராணுவம் இருந்த தனியார் காணிகளில் 90 வீதமானவற்றை விடுவித்தது நான்.

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காங்கேசன்துறை, வளளாய், தொண்டமானாறு வரையான காணிகளை விடுவித்தேன். எஞ்சியிருக்கும் காணிகளை விடுவிப்பது பற்றி டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி வந்தேன். அந்தகாணிகள் விடுவிக்கும் வரை அந்த காணிக்குரியவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதித்தேன். எனினும், 205இல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதால் எஞ்சியதை செய்ய முடியவில்லை.

நான் தேர்தல் விஞஞாபனத்தில் அபிவிருத்தியை பற்றியே விசேடமாக பேசியிருக்கிறேன். அந்த விஞஞாபனத்தில் விவசாயிகளிற்கு உரம், நிவாரணம் வழங்க, கடன்களை இரத்து செய்ய அதில் குறிப்பிட்டுள்ளேன். மக்களை முன்னிலைப்படுத்திய, மக்களின் விஞ்ஞாபனமாகவே இதை அமைத்துள்ளோம்.

மீனவ சமூகத்திற்கு கடன், படகு வழங்க, இளைஞர் யுவதிகளிற்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறென். இளைஞர்கள் தரமான கல்வியை பெற்றுக்கொள்ளாததால் வேலையற்று பிரச்சனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனது அரசின் கீழ் தரம்மிக்க கல்விக்காக பாரிய கல்வியை வழங்குவேன்.

உயர்தரம் சித்தியடைந்து பல்கலைகழகம் போக முடியாதவர்களிற்கும் பல்கலைகழகம் போக வசதியேற்படுத்துவேன். சாதாரணம் சித்தியடைந்து உயர்தரம் சித்தியடையாத மாணவர்களிற்கு தொழிற்கல்வி, தொழில்நுட்ப,கைத்தொழில் அறிவை பெற்றுக்கொடக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

நாம் குறுகிய, நீண்டகால திட்டமாக நல்ல கல்வியை வழங்குவோம். அதை முடித்தவர்களிற்கு வெலைவாய்ப்பு கிடைக்கும் விதமான கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வொம். இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேற்றமடைய காரமாக இருந்தது அறிவு சார்ந்த பொருளாதாரம்.

இலங்கை இளைஞர் யுவதிகள் நல்ல திறமைசாலிகள். கணினி, தொழில்நுட்ப அறிவை அவர்களிற்கு வழங்குவோம். இந்தியாவிலும் இப்படியான திட்டங்கள் உள்ளன. தகவல் தொழில்நுட்பம் சார்நத அறிவை மேற்கொள்ள கம்பனிகளை நிறுவ பெரும் முதலீடு செய்வோம்.

பொருளாதார விருத்தியை எற்படுத்த, இளையவர்களிற்கு வேலைவாய்ப்பை கொடுக்கவும் நான் ஆவண செய்வேன். எல்லோரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com