Wednesday, October 9, 2019

சந்திரிக்காவிடம் முறையிடுவோம் -மஹிந்த அமரவீர

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாடு திரும்பியவுடன் அவருடன் கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கோத்தாபயவுக்கு ஆதரவளிப்பதற்கு சு.கவின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து சந்திரிகா குமாரதுங்கவும் இதற்கு இணக்கம் தெரிவித்திருக்கிறாரா என்று ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குமார வெல்கம ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராகவே இருக்கின்றார். எனினும் அவர் எமது இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிப்பதாகவோ அல்லது எதிர்ப்பதாகவோ இது வரையில் கூறவில்லை என்றும் அவர் கூறினார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com