Wednesday, October 9, 2019

'முஸ்லிம்கள் பற்றித் தப்பாகப் பேசினேன்... என்னை மன்னித்துவிடுங்கள்!' பகிரங்க மன்னிப்புக்கோரும் மதுமாதவ

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த, தனது பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தமை தொடர்பில், அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில்,

'முஸ்லிம்களுக்கு எதிராக நான் முன்வைத்த கருத்துக்கள் கட்சிக்குப் பெரும்பாதிப்பை விளைவித்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதுபற்றிய தெளிவு எனக்குக் கிடைத்தது. நான் தவறே செய்துள்ளேன். அதற்காக நான் வருத்தமடைகின்றேன். அதற்காக இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோருகிறேன்.

எனவே, நான் கட்சியின் பிரதித் தலைவர், மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்கின்றேன்.' என மதுமாதவ அரவிந்த குறிப்பிப்பிட்டுள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

1 comments :

harris October 10, 2019 at 6:44 PM  

this all drama now he risan after he will be coming again now gota get to know because of him muslim not going to be with gota for time being wait out side of party. haaaaaa real drama

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com